Ration Card Benefits: ரேஷன் கார்டு உரிமையாளர்களுக்கு மோடி அரசின் சலுகைகள்
மத்திய அரசு, குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, ஏழ்மை கோட்டுக்குக் கீழே உள்ள (BPL) குடும்பங்களுக்கு பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இவற்றில் ரேஷன் கார்டு உரிமையாளர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் மிக முக்கியமானவை.
இந்தத் திட்டங்கள் மூலம், வீடு கட்டுதல், சமையல் எரிவாயு இணைப்பு போன்ற அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவுகின்றன.
BPL ரேஷன் கார்டு இருப்பது, இத்திட்டங்களுக்கு விண்ணப்பிப்பதற்கு அவசியமான தகுதியாகக் கருதப்படுகிறது.
இந்தக் கட்டுரையில், பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY) மற்றும் பிரதான் மந்திரி உஜ்ஜ்வலா யோஜனா (PMUY) ஆகிய இரு முக்கியத் திட்டங்களைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.
இவை ஏழ்மைக் குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த உதவுகின்றன.

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா – இலவச வீடு கட்டும் வாய்ப்பு.!
இந்தத் திட்டம் 2015ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதன் நோக்கம், நாடு முழுவதும் உள்ள ஏழ்மை குடும்பங்களுக்கு பக்கா (நிரந்தர) வீடுகளை வழங்குவதாகும்.
நகர்ப்புறம் (PMAY-U) மற்றும் கிராமப்புறம் (PMAY-G) என இரு பிரிவுகளாக இயங்குகிறது.
2025ஆம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ள இத்திட்டம், சுமார் 3 கோடி வீடுகளை கட்டும் இலக்கை வைத்துள்ளது.
BPL ரேஷன் கார்டு உரிமையாளர்கள், இத்திட்டத்தின் முதன்மை பயனாளிகளாக உள்ளனர்.
தகுதிகள்.?
- குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சம் வரை (EWS பிரிவு) அல்லது ரூ.6 லட்சம் வரை (LIG பிரிவு).
- வீடு இல்லாத அல்லது குடிசை வீட்டில் வசிப்பவர்கள்.
- பெண் தலைமையிலான குடும்பங்கள் முன்னுரிமை பெறும்.
- ஊனமுற்ற உறுப்பினர்கள் உள்ள குடும்பங்களுக்கும் சிறப்பு சலுகை.
சலுகைகள்.!
- கிராமப்புறங்களில் ரூ.1.2 லட்சம் வரை நிதி உதவி, மூன்று தவணைகளில் வழங்கப்படும்.
- நகர்ப்புறங்களில் ரூ.1.5 லட்சம் வரை உதவி, மேலும் வீட்டுக் கடன் வட்டி சலுகை (6.5% வரை).
- வீடு அளவு குறைந்தபட்சம் 25 சதுர மீட்டர், கழிவறை கட்ட ரூ.12,000 கூடுதல் உதவி.
- ரூ.10 லட்சம் வரை கடன், குறைந்த வட்டி விகிதத்தில் வங்கிகளில் கிடைக்கும்.
- சுற்றுச்சூழல் நட்பு தொழில்நுட்பங்கள் பயன்படுத்தி வீடு கட்டலாம்.
இத்திட்டம் மூலம், ஏழ்மை குடும்பங்கள் தங்கள் சொந்த வீட்டைப் பெற்று, சுகாதாரமான வாழ்க்கையை வாழ முடியும். சமீபத்திய பட்ஜெட்டில் ரூ.2.2 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பிரதான் மந்திரி உஜ்ஜ்வலா யோஜனா – இலவச எல்பிஜி இணைப்பு.?
இத்திட்டம் 2016ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. பாரம்பரிய சமையல் எரிபொருள்களால் ஏற்படும் உடல்நலப் பிரச்சினைகளைத் தீர்க்கும் வகையில், BPL குடும்பங்களுக்கு இலவச LPG இணைப்பு வழங்குகிறது.
உஜ்ஜ்வலா 2.0 என நீட்டிக்கப்பட்டுள்ள இது, 2025 வரை தொடர்கிறது. சுமார் 10 கோடிக்கும் மேற்பட்ட இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
தகுதிகள்
- 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள்.
- BPL குடும்பங்கள், SC/ST சமூகங்கள், இடம்பெயர்ந்த தொழிலாளர்கள்.
- வீட்டில் ஏற்கனவே LPG இணைப்பு இல்லாதவர்கள்.
சலுகைகள்
- இலவச LPG இணைப்பு, சிலிண்டர், ஸ்டவ் மற்றும் முதல் ரீஃபில்.
- ஒவ்வொரு 14.2 கிலோ சிலிண்டருக்கும் ரூ.300 சப்சிடி, ஆண்டுக்கு 12 ரீஃபில்கள் வரை.
- 5 கிலோ சிலிண்டருக்கும் விருப்பம் உண்டு.
- சப்சிடி நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.
- புகை இல்லாத சமையல் மூலம் உடல்நலம் மேம்படும், சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும்.
இத்திட்டம் பெண்களின் நேரத்தை மிச்சப்படுத்தி, அவர்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கிறது. சமீபகாலமாக, இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கும் சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
விண்ணப்பத்துக்கு தேவையான ஆவணங்கள்.?
இரு திட்டங்களுக்கும் பொதுவான ஆவணங்கள்:
- ஆதார் கார்டு (விண்ணப்பதாரர் மற்றும் குடும்ப உறுப்பினர்கள்).
- ரேஷன் கார்டு (BPL வகை).
- வங்கி பாஸ்புக் அல்லது செக்.
- மொபைல் எண்.
- சாதி சான்றிதழ் (தேவையானால்).
- வருமான சான்றிதழ்.
- சமீபத்திய புகைப்படங்கள்.
- வாக்காளர் அடையாள அட்டை.
- பிற அவசிய ஆவணங்கள் (இடம்பெயர்ந்தவர்களுக்கு சுய அறிவிப்பு).
ஆவணங்களை அசல் மற்றும் நகலுடன் தயாராக வைத்துக்கொள்ளுங்கள்.
விண்ணப்பிப்பது எப்படி.?
இரு திட்டங்களுக்கும் ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
- அருகிலுள்ள ஆன்லைன் சென்டர்கள் அல்லது பொது சேவை மையங்களில் (CSC) சென்று விண்ணப்பிக்கவும்.
- அதிகாரப்பூர்வ இணையதளங்களில் பதிவு செய்து, ஆவணங்களை பதிவேற்றம் செய்யவும்.
- விண்ணப்பம் சமர்ப்பித்த பிறகு, சரிபார்ப்பு நடைபெறும். தகுதி இருந்தால், சலுகை வழங்கப்படும்.
இத்திட்டங்கள் மூலம், மத்திய அரசு ஏழ்மை குடும்பங்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றி, அவர்களை மேம்படுத்துகிறது.
உங்கள் ரேஷன் கார்டைப் பயன்படுத்தி, இச்சலுகைகளைப் பெறுங்கள்.
மேலும் விவரங்களுக்கு உள்ளூர் அதிகாரிகளைத் தொடர்புகொள்ளுங்கள்.